Friday, December 18, 2009

கல்லூரிச் சாலை

விழுந்தேன்,
நிமிர்ந்தேன்,
வளர்ந்தேன்,
பரவசமாய்-
அன்று,
காதலர்கள்
ஊருக்கு பயந்து,
பேசும் அவசரத்தில்
என் வேரில்
சிந்திவிட்டுப்போன
காதல் துளிகளால்.
இன்றோ,
காதலர்களால் காயப்பட்ட
காதலுக்காக,
இலைகளாய்
கண்ணீர் சிந்துகிறேன்.
தப்பிக்க முடியாதபடி காலத்தால்
என் கால்கள்
கட்டிவிடப்பட்டிருந்தன.
காதல் மறைந்துப்போன,
கல்லூரிச் சாலையில்
மொட்டையாய்ப் போன
ஆலமரத்தின் அழுகுரல்.
-ரம்யா

No comments:

Post a Comment