Monday, March 15, 2010

ரம்யா நீ பொறந்துட்ட

முன்பெல்லாம் வரும் பிறந்தநாட்கள் என்றால் ஒரு இன்பமயமான அனுபவம். அப்போதைய தேதிகளில் பிரபலமான ரங்கிளா முதல் ஆரம்பம் ஆகி, வருடம் தோறும் புது புது உடை அணிந்து, அனைவரும் பள்ளியில் சீருடையில் வரும்போது நாம் தனித்துவம் பெறுவது பிறந்தநாளின் முழுமையை பூர்த்தி செய்து இருக்கும்.அன்றைக்கு எந்த டீச்சரும் அடிக்க மார்ட்டார்கள், திட்டமாட்டார்கள்.சாக்லேட் குடுப்பது முதல் வீட்டில் நடக்கும் அர்ச்சனைகள் இடம் மாறி கோவிலில் நடக்கும் போது நம்ம தான் அங்கே கெத்து.


காலையில் எழுந்து பக்கத்து வீட்டு அம்மாயி முதல் கைகுழந்தை வரைக்கு கேக் குடுத்து பிறந்தநாள் மொய் வசூல் செய்து "இது என்னோட காசு, எனக்கு புது பேக் வாங்கி தரனும்" என்று கர்வமாக அம்மாவிடம் சொல்லும் நேரம் ஏனோ இப்போதைய வெறுமையை விரட்ட கண்முன் வந்து செல்கிறது.

ஒரு பத்து பதினொறு வயசுல எல்லாம் "எப்பம்மா நான் காலேஜ்க்கு போவேன் அக்கா மாதிரி, இன்னும் எத்தன பொறந்தநாள் வரனும்"னு கேட்பேன்.கை ஓடிய HW எழுதி அலுத்துப்போன எல்லாம் பொடுசுங்களும் இந்த மாதிரி தான் நினைக்கும் போல. இப்படி எனக்கு பத்து வயசுலயே காலேஜ்னா, படிக்கவே வேண்டாம் ஓரே ஜாலி தானு எண்ணம்.

எப்படியோ காலேஜ் வந்த அப்போ கேண்டின்ல டிரிட் வெச்சு பர்ஸ் பழுத்துப்போய் வீட்டுக்கு போகும் போது எப்படா நாலு காசு சம்பாதிப்போம்னு ஒரே எண்ணமா இருக்கும். அப்படி மட்டும் சம்பாதிச்சா நம்ம நட்பு வட்டாரத்த ராயப்பாஸ் கூட்டிட்டு போய் அலப்பர பண்ணிடனும்னு நினைப்பேன்.

இப்போ சாம்பாதிக்கும் போது Leave Balance, LOP, project நு பல பல பிரச்சனை வீட்டுக்கே போக முடியாத நிலைமை.என்ன தான் அடுத்த அடுத்த பிறந்தநாள் வந்தாலும் அலுத்துப்போய் கொண்டாடின முந்தைய பிறந்தநாளுக்குரிய சிறப்பு இல்லனு தான் தோனுது.

பிறந்தநால் பரிசு என்ன என்ன வரும்னு ஒரு கனவே இருக்கும். சில பல தோழிகளுக்கு எல்லாம் வாழ்த்து சொல்லும்போது தான் பழைய நினைப்பை புரட்டிட்டு போவாங்க.இப்போ பல போருக்கு நான் எந்த ஊர்ல இருக்கேனு தெரியுமானு தெரியல.

"உனக்கு கல்யாணம் பண்ணனும்"னு சொல்லும்போது தான் அக்கா, அண்ணனனுங்க கல்யாணத்துல கல்யாண பொண்ண பார்த்துட்டு "அம்மா அக்கா புடவை கலர்ல எனக்கும் ஒரு பட்டுப்பாவாட வேணும். அதே மாதிரி நிறை நகையை எல்லாம் வேணும்"னு சொன்னது நியாபகம் வருது.

ஆனா இப்போ நகை விலைய பார்த்தா ரொம்ப பயமா இருக்கு. ஒவ்வோரு வயசு ஏறும் போது அறிவு வளருதோ இல்லையோ பயம் அதிமாகிட்டே போகுது. சின்ன பிள்ளையாவே இருந்திடலாம் போல.எது எப்படியோ வாழ் நாள்ல ஒரு வருசம் குறையுதேனு சந்தோஷ பட்டுக்கலாம்.

இந்த வருஷத்துல எனக்கு தமிழ்நாட்டு பக்கத்தில மாத்தல் மட்டும் கிடைக்கல அடுத்த பிறந்தநாளுக்கு நான் சும்மா உட்காந்து பதிவு மட்டும் போட்டுட்டு இருக்க மாட்டேன்.

எப்ப நம்ம அக்கா பொண்ணுங்களும், அண்ண பயன்களும் சித்தி அத்தைனு கூப்பிடுதோ நமக்கே லைட்டா வயசான மாதிரி தோனுது. எனக்கும் இப்போ அப்படி தான் தோனுது. ஏனா கமென்ட்ல போடற மாதிரி +1 ஆகுது இல்ல. :P:P

சன்டேல அந்த நல்ல நாள் வரதுனால ஸ்வீட் அட் மை டெஸ்க் டிஸ்யூ அட் மை CPUநு மெயில் அனுப்பி அலப்பர பண்ணி புரியாத பாஷைல கஷ்டப்பட்டு கும்மி அடிக்க வேண்டாம். நம்ம நட்பு வட்டாரம் சிக்கன் பிரியாணி செஞ்சு வீட்ல அசத்துறதா இருக்காங்க. சோ ஒரு கட்டு கட்டிட்டு கண்ணு முண்ணு தெரியாம தூங்கினா போதும்னு இருக்கு.

ரசிகர் பெருமக்களுக்கு நன்றி. ஏனா இந்த பதிவ(தலைப்ப) படிக்கிறீங்களோ இல்லையோ புடிச்சதோ இல்லையோ எதையுமே சொல்லாமா அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்து ஆடினரி வாழ்த்து ஸ்பெசல் சாதானு கமெண்ட் போட்டு அதுக்கு +1 போட்டு கும்மி அடிப்பீங்கனு தெரியாததா. நம்மளும் இந்த பொது வாழ்க்கைல இதத்தான செய்யுறோம்.

2 comments:

  1. உங்க பிறந்த நாள்ல போட்டிருக்கலாம்
    anyway timing missanalum warming wishes

    ReplyDelete
  2. அன்பின் ரம்யா

    இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்
    (என்னிக்குனாலும் சரி )

    நட்புடன் சீனா

    ReplyDelete