Monday, March 15, 2010

அனுபவம்

ஒரு வார காலமாக ஒரு தொல்லைப்பேசி எண்ணிலிருந்து அழைப்புகளை துண்டித்த வண்ணம் இருந்தேன். அழைப்பவர்களும் என்னை விடுவதாய் இல்லை வேறு வேறு எண்ணிலிருந்து அழைத்துக்கொண்டே இருந்தார்கள். நேற்று அவ்வாறாக காய்கறிகள் வாங்க கடைக்கு போய்விட்டு திருப்பும் போதுதான் அந்த அழைப்பு மீண்டும்.மூளை ஓய்வில் இருந்த சமயம் கை செய்த முட்டால் தனம்.


நானும் தெரியாதது போல என்ன என்று விசாரித்தேன்.தாழ்மையுடன் அவன் கூறியது "மேடம் உங்ககிட்ட லேப்டாப் இருக்கு அதுக்கு உங்ககிட்ட பிராட்பேண்ட் இல்லை அதனால உங்களுக்கு ஏர்டெல் வழங்கும் சேவையை தருகிறோம் " என்றான் முடித்தப்படி.என்னிடம் என்ன இருக்கின்றது என்று இவர்களுக்கு எல்லாம் யார் தகவல் தருகிறார்கள் என்று குழம்பியபடி "ஆம்" என்றேன். சரி மாத கட்டணம் எல்லாம் எவ்வளவு என்று விசாரித்தப்படி இருந்தேன்.கடைசியில் நாளை அலுவலகம் வந்து சந்தியுங்கள் என்றேன்.

சிறிது நேரத்தில் மீண்டும் ஒரு அழைப்பு "நீங்கள் இருக்கும் காலனிக்கு வெளியே நாங்க இருக்கிரோம்" என்றனர்.என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டு எண்ணை அவர்களிடம் குடுத்தேன். வந்தனர் இருவர் நான்கு சக்கர வாகனத்தில். 2800 கட்டணம் என்று ஆரம்பித்தவர்கள் கடைசியில் 1800 ரூபாய் இரங்கி வந்து நாளை உங்களுக்கு இணைப்பு வழங்கப்படும் என்பது வரைக்கும் வந்துவிட்டார்கள். மூன்று மாத வாடகையை முன்பே செலுத்திவிட்டு வீட்டில் இணைப்பு வாங்கிவிட்டால் வேறு இடம் செல்வதாக இருந்தால் பெறும் பிரச்சனை. மாற்றல் கேட்டு காத்து இருப்பதால் ஒரு 6 மாதமாக இதோ கிடைத்துவிடும் அதோ கிடைத்துவிடும் என்று எதையும் வாங்க ஒரு சின்ன தயக்கம் வேறு.எனக்கோ ஒரு சிறு குழப்பம் நானும் யோசித்து சொல்கிறேன் என்று பல முறை கூறினேன்.

பயனில்லை. எனக்கோ போகும் இடமெல்லாம் எடுத்து செல்வதாக இருந்தாக வேண்டும். ஆனால் இவர்களிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்றே தெரியவில்லை ஒரு அரை மணி நேரம் நீயா நானா என்று விவாதம், வாசலில் நின்றுக்கொண்டு. கடைசில் வென்றது நானே.இதில் சில உண்மைகள் எனக்கே தெரியாது.

என்னிடம் மாத கடைசி பணம் இல்லை என்றேன். அதற்கு அவர்கள் "எங்களுக்கு தெரியும் வரும் வெள்ளி உங்களுக்கு சம்பளம் 35000 கிடைக்கும்" என்றார்கள்.

என்னது எனக்கு 35000 சம்பளமா ? சொல்லவே இல்ல.ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை எதாவது ஒரு 100, 200 அய்க் கிடைக்குமானு F5 அமுத்திட்டு இருக்கோம். "போங்கப்பா வேற வீடு பாருங்கனு" அனுப்பிவிட்டு அக்கவுண்டில் இருக்கும் 163 ரூபாயை நினைத்து சம்பளத்திற்கு இன்னும் இரண்டே நாள் என்று உறுதிப்படித்திக்கொண்ட எனக்கு ஏனோ வெகு நேரம் தூக்கம் வரவில்லை 35000 பற்றியே எண்ணம்.

2 comments:

  1. //அய்க் கிடைக்குமானு F5 அமுத்திட்டு இருக்கோம்//
     
    :-))
     
    இப்படிப்பட்ட பேர்வழிகளிடம் உஷார்.

    ReplyDelete