Monday, March 15, 2010

ஊடல்

ஊடல்



சங்கிலி தொடருக்காய் கவிதை எழுத
காதல் பக்கங்களை புரட்டியபோது
தெரிகிறது-
பிரிந்த காதலனின் முகம்,
மெல்லிய புன்னகையை தாங்கி!
"மன்னிப்பு கேட்டுவிடலாமே" என்று
அவன் இடத்திற்கு நடக்கலானேன்!
"மன்னிப்பு கேட்கட்டுமே" என்று
பாதி வழியில் திரும்புகிறேன்
அவனை நோக்கி நடந்த
என் நிழலைவிட்டு - மீண்டும் ஊடல்.



No comments:

Post a Comment